;
Athirady Tamil News

ஜேர்மனியில் இரட்டை குடியுரிமைக்கு அனுமதி: யாரால் விண்ணப்பிக்க முடியும்?

0

ஜேர்மனியில் இரட்டை குடியுரிமை பெறுவதற்கான சட்டத்திற்கு வெற்றிகரமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரட்டை குடியுரிமை
ஜேர்மனியில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்தின் மூலம் குடியுரிமை பெறுவதில் நிலவி வந்த சிக்கல்களை குறைக்க தீர்வு காணப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் தற்போது வரை இரட்டை குடியுரிமை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இனிமேல் இரட்டை குடியுரிமையும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz) கொண்டு வந்திருக்கும் இந்த சட்டத்திற்கு, ஆதரவாக 382, எதிராக 234 எனும் வாக்குகள் பதிவாகி வெற்றி பெற்றது.

தற்போது ஜெர்மனியில் 8 வருடங்கள் வசித்தவர்கள் தான் குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.

இந்த சட்டமூலம் சட்டமானால், ஜெர்மனியில் 5 வருட காலங்கள் வசித்தவர்கள் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.