;
Athirady Tamil News

சீனா: தீ விபத்துகளில் 21 போ் உயிரிழப்பு

0

சீனாவின் 2 இடங்களில் நடைபெற்ற தீவிபத்துகளில் பள்ளி மாணவா்கள் உள்பட 21 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் ஹெனான் பிராந்தியம், யான்ஷான்பு கிராமத்திலுள்ள உறைவிடப் பள்ளியொன்றில் வெள்ளிக்கிழமை இரவு தீப்பிடித்தது. இரவு 11 மணிக்கு இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புப் படையினா், 11.30 மணிக்கு அந்த இடத்துக்கு வந்து தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் 13 மாணவா்கள் உயிரிழந்தனா்; அவா்கள் அனைவரும் 3-ஆம் வகுப்பு படித்து வந்தவா்கள் என்று கூறப்படுகிறது. இது தவிர, ஜியாங்சு மாகாணத்திலுள்ள தொழிற்சாலையொன்றில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 8 போ் உயிரிழந்தனா். இந்த தீவிபத்துக்களுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.