;
Athirady Tamil News

சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டில் காரைநகர் இளந்தொன்றல் விளையாட்டு கழகத்தினர்

0

சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் இளந்தொன்றல் விளையாட்டு கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி அதிகரித்து வருவதுடன் , அதன் பாவனையாளர்களுக்கு அதிகரித்து வரும் நிலையில் அவற்றை தடுக்கும் நோக்குடன் இளம் தென்றல் விளையாட்டு கழக இளைஞர்கள் செயற்பட்டு வருகின்றனர்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றினை முற்றுகையிட்டு , உற்பத்தி பொருட்களுடன் . ஒரு தொகை சட்ட விரோத மதுபானத்தையும் மீட்டு இருந்தனர்.

அதேவேளை , சட்டவிரோத மதுபானத்தை கொள்வனவு செய்து அவற்றை எடுத்து சென்ற இருவரை மடக்கி பிடித்து , அவர்களிடம் இருந்து அவற்றை பறிமுதல் செய்து நிலத்தில் ஊற்றியதுடன் , அவர்களை கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.

சட்டவிரோத மதுபான ஒழிப்பு செயற்பாட்டிற்கு காரைநகர் பிரதேச சபை இளம் தென்றல் விளையாட்டு கழகத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.