;
Athirady Tamil News

நெடுந்தீவில் 06 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

0

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 06 தமிழக கடற்தொழிலாளர்கள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்

சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த கடற்படையினர் , இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்டு இருந்த தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்ததுடன் , அவர்களின் இரண்டு படகுகளையும் மீட்டு இருந்தனர்.

கைது செய்யப்பட்ட கடற்தொழிலாளர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களம் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.