;
Athirady Tamil News

நாரம்மலவில் சுட்டுக்கொல்லப்பட்ட குடும்பஸ்தர்: பொலிஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

0

நாரம்மல பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரை நாரம்மல நீதவான் நீதிமன்றில் இன்று (23-01-2024) ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி ரன்முத்துகல, நாரம்மலையில் லொறியை சோதனை செய்து கொண்டிருந்த போது, பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் 3 பிள்ளைகளின் தந்தையான 41 வயதான ரொஷான் குமாரதிலக்க என்பவர் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.