;
Athirady Tamil News

திடீரென ஒரே நாளில் 13 பேருக்கு மரணதண்டனை விதித்த நாடு

0

ஈராக்கில் திடீரென 13 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதற்கு சர்வதேச மனித உரிமை அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈராக்கின் தெற்கு மாகாணத்தில் உள்ள நஸ்ரியாக் சிறையில் கடந்த 24-ம் திகதி ஒலிபெருக்கியில் 13 தண்டனை கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்போவதாக சிறை நிர்வாகம் திடீரென அறிவித்தது.

13 கைதிகளுக்கும் மரண தண்டனை
அதன்படி மறுநாள் 25-ம் திகதி அதிகாலை 13 கைதிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.

திடீரென விதிக்கப்பட்ட மரணதண்டனை
முன்னதாக கொடுங் குற்ற வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் குடும்பத்தினருக்கு முறையான அறிவிப்பு தெரிவித்த பின்னரே நாள் குறித்து தண்டனையை நிறைவேற்றி வந்த ஈராக் அரசு திடீரென 13 சிறைகைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.