;
Athirady Tamil News

அரசியல்வாதிகளின் கபட நோக்கங்களுக்கு இனியும் பலியாகக் கூடாது

0

இன நல்லிணக்கத்துடன் வாழ நாங்கள் விருப்பம் கொண்டிருந்த போதிலும், அரசியல் வாதிகள் பிளவுகளை வளர்த்து வருகின்றனர்; அவர்களது கபட நோக்கங்களுக்கு இனியும் பலியாகக் கூடாது என நல்லிணக்க சுற்றுப்பயணத்தில் முடிவெடுத்துள்ளனர்.

சுழிபுரம் கிழக்கு கிராம அபிவிருத்தி சங்கத்தின் அழைப்பில் ஹில்பிட்ட கிராம அபிவிருத்தி சங்கத்தை சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்திற்கு நல்லிணக்க சுற்று பயணம் ஒன்றினை மேற்கொண்டனர்.

சுற்று பயணத்தின் ஓர் அங்கமாக இரு கிராம மக்களின் ஒன்று கூடல் சுழிபுரம் பிரதேச சபை மண்டபத்தில், கிராம சங்க தலைவர் ந, சிவரஞ்சன் தலைமையில் நடைபெற்ற போது , இரு கிராம மக்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன

மொழி பேதம், மத பேதம் கடந்து இலங்கையர்கள் என ஒன்றிணைவோம். இன நல்லிணக்கத்துடன் வாழ நாங்கள் விருப்பம் கொண்டிருந்த போதிலும், அரசியல் வாதிகள் பிளவுகளை வளர்த்து வருகின்றனர். அவர்களது கபட நோக்கங்களுக்கு இனியும் பலியாகக் கூடாது என கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உறுதி கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில், தாங்கள் யாழ்ப்பாணம் வந்ததைப் போல சுழிபும் கிராம மக்கள் தமது இடங்களுக்கு சுற்றுலா வந்து இது போன்ற உணர்வுப் பரிமாற்ற நிகழ்வுகளைச் செயலாக்க வேண்டும் என்று ஹல்பிட்ட கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.