;
Athirady Tamil News

கார் நிறுத்தும் தகராறில் கல்லூரி மாணவர் உட்பட இருவர் கொலை!

0

இந்திய மாநிலம் ஹரியானாவில் கல்லூரி மாணவர்கள் மற்றும் சிலருக்கு கார் நிறுத்தும் தகராறில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹரியானாவில் குருகிராம் நகரில் உள்ள பலியாவாஸ் எனும் கிராமத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பண்ணை இல்லம் ஒன்றில் இந்த கொண்டாட்டம் நடந்துள்ளது. இதில் 30 கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் கார்களை நிறுத்தும்போது அங்கே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மாணவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கும்போது, பிரவீன் குமார் (36) என்கிற பண்ணை இல்ல உரிமையாளர் தடுக்க முயன்றுள்ளார்.

ஆனால் அவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவர்கள் 8 பேர் பலத்த காயமடைந்தனர். அதனைத் தொடர்ந்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பிரவீன் குமார் நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

இந்த நிலையில் கஜேந்திரா என்கிற மாணவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடரில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சச்சின், ஆஷிஷ் ஆகிய இருவரை கைது செய்ததுடன், மற்ற குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.