;
Athirady Tamil News

சனத்தின் வெற்றிடத்திற்கு ஜகத்; வெளியானது வர்த்தமானி

0

விபத்தில் உயிரிழந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவினால் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எல்.கே. ஜகத் பிரியங்கர தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் வெளியான வர்த்தமானியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில், நாடாளுமன்ற செயலாளர் நாயகம், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் மாவட்ட தலைவராக ஜகத் பிரியங்கர செயற்பட்டு வருகின்றார்.

அதேவேளை சனத் நிஷாந்த வகித்த ராஜாங்க அமைச்சர் பதவிக்கு ராஜபக்ச குடும்ப உறுப்பினர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.