;
Athirady Tamil News

யாழில் துவிச்சக்கரவண்டியிலிருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயரிழப்பு

0

யாழில் துவிச்சக்கரவண்டியிலிருந்து விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (01.02.2024) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் அளவெட்டி தெற்கு பகுதியை சேர்ந்த சிவனடியான் சிவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை
குறித்த நபர் கடந்த 28ஆம் திகதி ஆறு மணியளவில் தனது துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கீழே விழுந்துள்ளார்.

இதன்போது வீதியில் சென்றவர்கள் அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில் அவர் அதிக மது போதையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.