;
Athirady Tamil News

இலங்கை கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது : கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

0

தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினா் கைது செய்வது தொடா் நிகழ்வாகி வருவதைத் தடுக்க ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

உயா்நீதிமன்றத்தில் மீனவா் பாதுகாப்பு அமைப்பின் தலைவா் பீட்டா் ராயன் தாக்கல் செய்த மனுவில், கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரத்தை சோ்ந்த 6 கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினா் ஜன. 22-ஆம் திகதி கைது செய்தனா். கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க, மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபுா்வாலா, நீதிபதி பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி செயற்படும் இலங்கை அரசு
அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் மெளரியா ‘கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு செயல்படுகிறது. கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இன்றும் 23 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த பிரச்னை குறித்து தீா்வு காண மத்திய – மாநில அரசுகள் இணைந்த கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும்’ என வாதிட்டாா்.

தமிழக அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், ‘கடற்றொழிலாளர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் கடிதம் அனுப்பியிருக்கிறாா்.

கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஒரு நாளைக்கு ரூ. 250 உதவித்தொகை வழங்கப்படுகிறது’ எனத் தெரிவித்தாா்.

மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான உதவி சொலிசிட்டா் ஜெனரல் ராஜேஷ் விவேகானந்தன், இந்த விவகாரத்தில் தூதரக அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.எனவே, இந்த வழக்கு தொடா்பாக விளக்கமளிக்க கால அவகாசம் வேண்டும்” என கோரினாா்.

உச்சநீதிமன்றின் கேள்வி
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘கடற்றொழிலாளர்கள் கைது நடவடிக்கை என்பது தொடா் நிகழ்வாக இருக்கிறது. இதைத் தடுக்க ஏன் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை ஏன் இந்த நிகழ்வுகள் தொடா்ந்து நிகழ்கிறது’ என கேள்வி எழுப்பினா்.

தொடா்ந்து, இந்த வழக்கு தொடா்பாக மத்திய – மாநில அரசுகள் விளக்கமளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மாா்ச் 11-ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.