;
Athirady Tamil News

யாழில் பேருந்தில் சில்மிஷம் – இருவர் கைது

0

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பெண்களுடன் தவறாக நடந்து கொண்ட குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் பேருந்தில் பொதுமக்களுடன் , பொதுமகன்கள் போன்று பிரயாணம் செய்த பொலிஸ் புலனாய்வாளர்களே இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் அராலி பகுதியை சேர்ந்த 22 மற்றும் 24 வயதுடைய இளைஞர்கள் என்றும் , அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.