;
Athirady Tamil News

பிரித்தானியாவில் பணியாற்ற விரும்புவோருக்கு மகிழ்ச்சியான செய்தி

0

பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் பல் மருத்துவர்களுக்கான தேர்வை ரத்து செய்ய அந்நாட்டுஅரசு தீர்மானித்துள்ளது.

பிரித்தானியாவில் பல் மருத்துவர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில், அந்நாட்டு மக்கள் தாங்களாகவே பற்களை பிடுங்கி கொண்டுள்ளார்கள் என குறுஞ்செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டவர்கள் பிரித்தானியாவில் பல் மருத்துவர்களாக பணியாற்றவேண்டும் என்றால் தேர்வு ஒன்றை எழுத வேண்டியிருந்தது.

கொடுப்பனவுகள்
ஆனால், அந்நாட்டில் காணப்படும் பல் மருத்துவர்களின் தட்டுப்பாடு காரணமாக குறித்த தேர்வை ரத்து செய்வதற்கு அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, பிரித்தானியாவில் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.

மேலும், நல்ல ஊதியம், சில குறிப்பிட்ட இடங்களில் பணி புரிவோருக்கு கொடுப்பனவுகள் என பல வசதிகள் செய்துக் கொடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.