;
Athirady Tamil News

வெளிநாடொன்றில் பயங்கர விபத்து: 10 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

0

மெக்சிகோவில் பயணிகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மற்றும் பிக்-அப் டிரக் இடையே ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விபத்து மெக்சிகோ நகரின் வடமேற்கில் உள்ள San Luis Potosí மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் பாதுகாப்பிற்கான செயலகம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பெண்கள், 4 சிறார்கள் மற்றும் ஒரு ஆண் உள்ளடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தீர்மானிக்கப்படாத எண்ணிக்கையில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள கிளினிக்குகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக செயலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.