;
Athirady Tamil News

கிம்புலாப்பிட்டிய பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் மூவர் காயம்

0

நீர்கொழும்பு அருகே கிம்புலாப்பிட்டிய பிரதேச பட்டாசுத் தொழிற்சாலையொன்றி்ல் ஏற்பட்ட விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று(26.02.2024) மாலை நடைபெற்றுள்ளது.

வீடொன்றில் ஒருசிலர் இணைந்து பட்டாசுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளம் பட்டாசுகள் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில் காயமடைந்தவர்களை நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.