;
Athirady Tamil News

பசிபிக் பெருங்கடலில் உள்ள மெக்வாரி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

0

அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா மாகாணத்தின் ஒரு அங்கமான மெக்வாரி தீவுப்பகுதி, தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் நியூசிலாந்து மற்றும் அண்டார்டிகாவுக்கு இடையில் அமைந்துள்ளது.

இந்த தீவுப்பகுதியில் நேற்று (28) காலை 5.56 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் 5.4 ஆக பதிவு
நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவாகி இருந்ததாக அமெரிக்க புவியியில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைப்பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.