;
Athirady Tamil News

பங்களாதேஸ் தலைநகரில் தீ விபத்து : 40இற்கும் மேற்பட்டோர் பலி

0

பங்களாதேசில் கட்டிடமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40இற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்நாட்டின் தலைநகர் டாக்காவில் உள்ள ஏழு மாடிகளைக் கொண்ட உணவு விடுதியொன்றில் வேகமாக தீ பரவியதன் காரணத்தினால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்திலிருந்து 75இற்கும் அதிகமானவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

43 பேர் பலி
இரண்டு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை டாக்கா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுவர்கள் உட்பட 33 பேரின் உடல்கள் உள்ளதாகவும் நகரின் மற்றுமொரு மருத்துவமனையில் பத்து பேர் உயிரிழந்துள்ளதுடன் 20இற்கும் அதிகமானவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிவாயு கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ள அதிகாரிகள் குறித்த கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டதனால் அந்த கட்டிடம் மிகவும் ஆபத்தானதாக காணப்பட்டதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.