;
Athirady Tamil News

வவுனியாவில் கணவனால் கைவிடப்பட்ட இளம் தாய் – மகன் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைப்பு

0

வவுனியாவில், கணவனால் கைவிடப்பட்ட நிலையில் நிர்கதிக்குள்ளான இளம் தாய் மற்றும் விசேட தேவையுடைய 07 வயது மகன் ஆகியோர் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் அபயம் பிரிவுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இந்த முறைப்பாடு தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸால் ஆராய்ந்து வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய அபயம் பிரிவினரால், வவுனியா பிரதேச செயலாளருக்கு தகவல் வழங்கப்பட்டது.

துரித நடவடிக்கை
இந்நிலையில் உடனடியாக செயற்பட்ட வவுனியா பிரதேச செயலாளர், குறித்த சிறுவனையும், இளம் தாயையும் பாதுகாப்பு இல்லத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும், சமூக நலன் விரும்பி ஒருவரால் வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் அபயம் பிரிவினர் துரித நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.