;
Athirady Tamil News

இலங்கை பாடசாலை முறைமையில் மாற்றம்

0

நீண்டகால மாற்றமாக, எதிர்காலத்தில் பாடசாலை முறைமையும் பல்கலைக்கழக முறைமையும் மாற்றப்படத் தயாராக உள்ளன என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கல்விச் சீர்த்திருத்தம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பல வருடங்களுக்கு முன்பே நமது கல்விமுறை மாறியிருக்க வேண்டும். அது உண்மை. எந்த அரசு வந்தாலும் அதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. இதற்காகத்தான் கல்விச் சீர்திருத்தங்களைத் தொடங்கினோம்.

அடுத்த ஆண்டுக்குள், புதிய விடயங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனை விரைவாக நடைமுறைப்படுத்த துணைக்குழு நியமிக்கப்பட்டு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கல்வியானது வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட வேண்டும். உலகில் உள்ள நாடுகள் தொழிலாளர் சந்தைக்கு ஏற்றவாறு படிப்புகளை வடிவமைத்துள்ளன.

ஆனால் நம் நாட்டில் உள்ள கற்கைகள் பழையவை. பாடசாலைக் கட்டமைப்புக்கள் தொழில்சந்தை பற்றி பற்றி சரியான ஆய்வு செய்யவில்லை.

ஆனால் இந்த அரசாங்கத்தில் முதன்முறையாகத் தொழிற்சந்தை குறித்து சர்வதேச ஆய்வை நடத்தி இலங்கைக்கு ஏற்ற ஆய்வுகளை பிரயோகித்து அறிக்கை தயாரித்தோம்.

அதன் அடிப்படையில், தொழிலாளர் சந்தைக்கு ஏற்ற கல்வியை நாங்கள் தயார் செய்கிறோம். உடனடித் தீர்வாக தொழிற்பயிற்சி நிலையத்தின் படிப்புகள் மாற்றப்படுகின்றன.

நீண்டகால மாற்றமாக, எதிர்காலத்தில் பாடசாலை முறைமையும் பல்கலைக்கழக முறைமையும் மாற்றப்படத் தயாராக உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.