;
Athirady Tamil News

நீருக்கடியில் செல்லும் முதல் மெட்ரோ: மோடி தொடக்கிவைத்தார்!

0

கொல்கத்தாவின் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் இடையே நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடக்கிவைத்தார்.

மேற்கு வங்கத்தில் ரூ. 15,000 கோடி மதிப்பிலான பல்வேறு மத்திய அரசின் நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடக்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா கிழக்கு-மேற்கு மெட்ரோ வழித்தடத்தில் ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் இடையே நீருக்கு அடியில் கட்டப்பட்டுள்ள மெட்ரோ வழித்தடத்தை தொடக்கிவைத்தார்.

ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையேயான தொலைவு 4.8 கி.மீ., இதற்கிடையே ஹுக்ளி ஆற்றை கடக்க 32 மீ. ஆழத்தில் சுரங்கம் அமைக்கப்பட்டு 520 மீட்டர் நீளத்துக்கு மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது.

ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் இடையேயான 4.8 கி.மீ. மெட்ரோ பாதைக்கு மட்டும் ரூ. 4,965 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முதல் நீருக்கடியில் பயணிக்கும் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர், பள்ளி மாணவர்களுடன் பயணம் மேற்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.