;
Athirady Tamil News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி விஜயம்

0

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நேற்று (06) விஜயம் செய்தார்.

இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

பல்கலைக்கழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்த முன்மொழிவுகள் உட்பட கல்வித் துறையில் கூட்டுத் திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

குறித்த சந்திப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரகுராம், இந்து கற்கைகள் பீட பீடாதிபதி ச.பத்மநாதன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.