;
Athirady Tamil News

யாழில். விளையாட்டு போட்டியில் ஐஸ் கிறீம் விற்றவருக்கு 42 ஆயிரம் தண்டம்

0

பாடசாலை இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது , சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்பனை செய்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு 42 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு போட்டியின் போது , சுகாதார சீர்கேட்டுடன் ஐஸ் கிறீம் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் 07 குற்றச்சாட்டுக்களை முன் வைத்து உரிமையாளருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைகளின் போது , உரிமையாளர் குற்றங்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , 42 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.