;
Athirady Tamil News

மொட்டு கட்சிக்குள் தீவிரமடையும் உள்ளக மோதல் : அவசரமாக கூடும் உறுப்பினர்கள்

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்திற்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவினால் (Nimal Siripala de Silva) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டமானது, நாளை (08.04.2024) கொழும்பில் (Colombo) இடம்பெறவுள்ளது.

இதன்போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடப்படும் என கட்சியின் பொருளாளரும் இராஜாங்க அமைச்சருமான லசந்த அழகியவண்ண ( Lashandha Azhagiyawanna) தெரிவித்துள்ளார்.

விசேட பேச்சுவார்த்தை
மேலும் அவர், அரசியல் நிலைமைகள் தொடர்பில் பல தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கட்சி தலைமையகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.