;
Athirady Tamil News

ஆலயத்திற்கு சென்ற போது நேர்ந்த அசம்பாவிதம்… பெற்றோரின் கண்முன்னே உயிரிழந்த குழந்தை!

0

அம்பாறையில் லொறி மோதி படுகாயமடைந்த நிலையில் 2 வயது குழந்தை உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் நேற்றிரவு (06-04-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் அம்பாறை, நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 02 வயது 07 மாதங்களேயான குழந்தையே உயிரிழந்துள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆலயம் ஒன்றில் குழந்தையுடன் பெற்றோர் சமய நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த போது, ​​குழந்தை பெற்றோரின் கவனத்தில் இருந்து தப்பி வீதிக்கு வந்தபோது இந்த விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.