;
Athirady Tamil News

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நற்செய்தி

0

நாட்டிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 20 கிலோ கிராம் அரிசி வழங்குவதற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியது.

தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கான அரிசிப் பொதிகள் விநியோகம் சம்பந்தப்பட்ட அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைய பிரதேச செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

54,800 மெட்ரிக் தொன் அரிசி
இந்த அரிசி மூடைகள் நலன்புரி திட்டத்திற்காக முறையீடு செய்த மக்களில் நலன்புரிப் பலன்கள் வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நலத்திட்டத்தின் மூலம் பயன்பெறாத சமுர்த்தி பயனாளிகள், நலன்புரி பெறாத முதியோர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.

இதற்குத் தேவையான 54,800 மெட்ரிக் தொன் அரிசியை விநியோகஸ்தர்களிடம் இருந்து மாவட்டச் செயலாளர்கள் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.