;
Athirady Tamil News

தங்கர் பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் கைது.., தமிழக அரசியலில் பரபரப்பு

0

பாமக வேட்பாளர் தங்கர்பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த நபர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள்ளார்.

பாமக வேட்பாளர் தங்கர் பச்சான்
வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக பாமக அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் கடலூர் மக்களவை தொகுதியில் பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக சார்பில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இந்நிலையில் கடலூர் சுற்றுவட்டாரத்தில் தங்கர் பச்சான் தீவிரமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

கிளி ஜோதிடர் கைது
அந்தவகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில் தங்கர் பச்சான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அங்கு, கிளி ஜோதிடம் பார்த்து பார்த்து கொண்டிருந்தவரிடம் தங்கர் பச்சான் ஜோதிடம் பார்த்தார். அப்போது அவருக்கு அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று கிளி ஜோதிடர் கூறினார்.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தங்கர்பச்சானுக்கு கிளி ஜோதிடம் பார்த்த ஜோதிடர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதாவது, பாதுகாக்கப்பட்ட பட்டியலில் உள்ள பச்சைக்கிளிகளை கூண்டில் அடைத்து வைத்து ஜோதிடம் பார்த்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.