;
Athirady Tamil News

கடையொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

0

எல்பிட்டிய உரகஸ்மன்ஹந்திய, மீகஸ்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கடையொன்றிலிருந்து பலத்த காயத்துடன் இரத்தம் கசிந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது யமுனா நிரோஷினி என்ற 41 வயதுடைய கடை உரிமையாளரின் மனைவியயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலதிக விசாரணைகள்
மேலும், இவர் தனது கணவருடன் இந்தக் கடையில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.