;
Athirady Tamil News

மின் கட்டணம் செலுத்தல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0

மின்சார கட்டணம் மற்றும் நீர் கட்டணங்கள் செலுத்துதல் மற்றும் பற்றுச்சீட்டு பெறுதல் தொடர்பில் அவதானமாக இருக்கும்படி பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த எச்சரிக்கையானது உள்ளூர் முகவர்கள் மற்றும் தபாலகங்களில் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சில இடங்களில் மக்களிடம் மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணத்திற்கான பணத்தை பெறும் தபாலக உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூர் முகவர்கள் பணத்தை மின்சார சபைக்கு செலுத்துவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முறைப்பாடுகள்
இந்நிலையில் குறித்த பணத்தை அவர்கள் கையாடல் செய்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் தபாலகங்கள், உப தபாலகங்கள் மற்றும் உள்ளூர் முகவர்களிடம் பணம் செலுத்தும் பொதுமக்கள் பற்றுச்சீட்டிணை உரிய வகையில் பரிசீலிக்கும் பட்டி அல்லது இணைய வழி ஊடாகவோ மற்றும் மின்சார சபை கிளை ஊடாகவோ கொடுப்பனவு கிடைக்க பெற்றமை தொடர்பில் உறுதிப்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.