;
Athirady Tamil News

திருகோணமலையில் நோயாளர்கள் சிரமம்

0

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகளின் பற்றாக்குறையால் நோயாளிகள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரியவந்துள்ளது.

திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையின் பாவனைக்காக 12 நோயாளர் காவு வாகனங்கள் இருந்தும் தற்போது 03 வாகனங்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வந்துள்ளன.

இதனால் நோயாளிகளை மேலதிக சிகிச்சைகளுக்காக வேறு வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதில் தாமதங்கள் ஏற்பட்டு வருவதோடு பல்வேறுபட்ட சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

நோயாளர்களுக்கான சேவை
கடந்த சில மாதங்களாக ஒரு வாகனம் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது 03 வாகனங்கள் நோயாளர்களுக்கான சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

குறித்த வாகனங்களில் இரண்டு வாகனங்கள் முற்றாக பாவிக்க முடியாத நிலையில் இருப்பதோடு ஏனைய 07 வாகனங்களும் திருத்த வேலைக்காக வேலைத்தளங்களிலும் வைத்தியசாலை வளாகங்களிலும் நீண்டகாலமாக தரித்து நிற்பதாகவும் தெரிய வந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.