;
Athirady Tamil News

பேரீச்சம் பழத்தின் நன்மைகள்: உடலில் ஏற்படும் வியக்கத்தக்க மாற்றங்கள்!

0

வெயில் காலங்களை விட குளிர் காலங்களில் மனித உடலில் பலவித நோய் தொற்றுகள் உண்டாகும் அபாயம் காணப்படுவதால் நாளாந்தம் பேரீச்சம் பழத்தை உட்கொள்ளுமாறு வைத்தியர்கள் பரிந்துரைக்கின்றனர்.

குறிப்பாக விட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கல்சியம், பொட்டாசியம், பொஸ்பரஸ், மக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் அனைத்து ஊட்டசத்துக்களும் பேரீச்சம் பழத்தில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பேரீச்சம்பழம்
தொடர்ந்து பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கும். பேரீச்சம்பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் ஆகிய இயற்கையான சர்க்கரைகள் இருக்கின்றன.

இவை ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. பேரீச்சம்பழத்தில் அதிக நார்ச்சத்து நிரம்பி உள்ளது. இதனால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது.

இதன் காரணமாக, திடீரென ஏற்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகள் குறைகிறது.

மேலும், இதிலுள்ள பொட்டாசியம், இதய சம்மந்தமான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. உடல் எடையை அதிகரிக்க பேரீச்சம் பழம் சாப்பிட வேண்டும். இதில் உள்ள கலோரிகள், உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.

நன்மைகள்
அத்துடன், பேரீச்சம் பழத்தில் விட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இது நரம்பு மண்டலத்தின் செயல்திறனை அதிகரித்து, மூளை சிறப்பாக செயல்பட வழிவகுக்கிறது.

பேரீச்சம்பழத்தில் உள்ள விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்து இருப்பதால், நோய்களை தடுத்து, உடல் அமைப்பை மேம்படுத்துகிறது.

பேரீச்சம் பழத்தில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், ரத்த சோகை போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. மேலும், உடலில் இரும்புச்சத்து குறைபாடு நோய்கள் வராதபடி நம்மை பாதுகாத்து கொள்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.