;
Athirady Tamil News

வீகன் டயட் ; குழந்தையை பட்டினி போட்டு கொன்ற தந்தை

0

ரஷ்யாவில் வீகன் உணவுமுறையை பின்பற்றும் ஒருவர் தன் குழந்தைக்கு உணவு அளிக்காமல் பட்டினி போட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் சமூக வலைதள இன்புளூயன்சராக இருப்பவர் மாக்சிம் லியுட்டி. இவர் வீகன் டயட் முறை குறித்து வீடியோ பதிவுகள் இட்டு பிரபலமாக இருந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு வயது நிரம்பாத பச்சிளம் குழந்தை உள்ளது.

சமீபமாக லியுட்டி வீகன் ப்ராணா டயட் என்ற முறையை பேசி வந்துள்ளார். ஊட்டச்சத்துகளை உணவின் மூலமாக மட்டுமல்லாமல் சூரிய ஒளி உள்ளிட்ட இயற்கை வழியில் பெறுவது குறித்த டயட் முறை அது.

அதில் தனது குழந்தையையே ஈடுபடுத்திய லியுட்டி, தன் குழந்தைக்கு பால் உள்ளிட்ட எந்த ஆகாரமும் கொடுக்காமல் சூரிய ஒளியில் மட்டும் காட்டி வந்துள்ளார். இதனால் பசியில் வாடிய பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலியானது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் லியுட்டியை கைது செய்து 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை சமீபத்தில் பிரபலமான இன்ஸ்டாகிராம் பெண்மணி ஒருவர் தொடர்ந்து வீகன் முறையில் பழ ஜூஸ் மட்டுமே குடித்து வந்த நிலையில் ஊட்டச்சத்து குறைவால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.