;
Athirady Tamil News

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்

0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான விவாதம் நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

நாளை 2024.04. 24ஆம் திகதி காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை, சட்டத் திருத்தச் சட்டமூலம் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் உள்ள உத்தரவுகள் மீது விவாதம் நடத்தப்பட்டு அதன் பிறகு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விவாதம் தொடங்கும்.

இந்த விவாதத்துக்கான பிரேரணை எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்டதுடன், முன்னதாக ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக 13 கோடி ரூபா செலவில் 11 நாட்கள் நாடாளுமன்ற விவாதம் நடத்தப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.