;
Athirady Tamil News

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கடுமையாகும் சட்டம்

0

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை மே மாதம் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பொலிஸ் மா அதிபர் இதனை கூறியுள்ளார்.

கடுமையாகும் சட்டம்

புத்தளம் மாவட்டத்தில் போதைப்பொருளை அழிப்பதற்காக ஏற்கனவே விசேட இடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்தவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.