;
Athirady Tamil News

சிறைச்சாலையில் விபரீத முடிவை எடுத்து உயிரிழந்த இளம் கைதி!

0

கண்டியில் உள்ள பல்லேகல சிறைச்சாலையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி, மஹய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞனே இவ்வாறு தவறான முடிவை எடுத்து உயிரிழந்திருப்பதாக பலகொல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கண்டி பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பலகொல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.