;
Athirady Tamil News

700 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட பெண்… அதிர்ச்சி தரும் அவரது பின்னணி

0

அமெரிக்காவில் பல எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தளித்து கொல்ல முயன்ற குற்றத்திற்காக நர்ஸ் ஒருவருக்கு 380 முதல் 760 ஆண்டுகள் சிறை தனடனை விதிக்கப்பட்டுள்ளது.

17 நோயாளிகளின் இறப்பு
கடந்த 2020 முதல் 2023 வரையான காலகட்டத்தில் 5 சுகாதார மையத்தில் பணியாற்றியுள்ள இவர் 17 நோயாளிகளின் இறப்புக்கு காரணமாகியுள்ளார் என நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பென்சில்வேனியா பகுதியில் செவிலியராக பணியாற்றி வந்துள்ள 41 வயதான Heather Pressdee என்பவரே மூன்று கொலை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

இவர் மீது 19 கொலை முயற்சி வழக்குகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரவுப்பணியின் போதே இவர் இந்த கொடூரத்தை நிகழ்த்தி வந்துள்ளார்.

22 நோயாளிகளுக்கு அதிக அளவிலான இன்சுலின் மருந்தை அளித்துள்ளார். பெரும்பாலான நோயாளிகள் அடுத்த சில மணி நேரங்களில் இறந்துள்ளனர். சிலர் தாமதமாக மரணமடைந்துள்ளனர்.

பகீர் பின்னணி அம்பலம்
இன்சுலின் அளவு அதிகரித்தால், இரத்தச் சர்க்கரைக் குறைவுக்கு வழிவகுக்கும், இதயத் துடிப்பை அதிகரிக்கலாம் மற்றும் மாரடைப்புக்கு கூட வழிவகுக்கும். கடந்த ஆண்டு மே மாதம் இரண்டு நோயாளிகள் மரணம் தொடர்பில் அவர் மீது முதலில் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் பொலிசார் முன்னெடுத்த விரிவான விசாரணையில் அவரது பகீர் பின்னணி அம்பலமானது. ஒரு நர்ஸாக அவரது நடவடிக்கை தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதாக சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, நோயாளிகளை அவர் தரக்குறைவாக விமர்சித்தும் வந்துள்ளார். Heather Pressdee போன்று நியூ ஜெர்சி மற்றும் பென்சில்வேனியாவில் 29 நோயாளிகளை இன்சுலின் மருந்தால் கொலை செய்துள்ளார் Charles Cullen என்ற செவிலியர்.

இதய நோயாளிகளுக்கு William Davis என்ற செவிலியர் காற்றை ஊசியால் செலுத்தி 4 நோயாளிகளின் உயிருக்கு உலை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.