;
Athirady Tamil News

ஆசிய நாடுகளில் கடுமையான வெப்பம் : பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கும் மக்கள்

0

ஆசிய பிராந்திய நாடுகளில் அதிக வெப்பம் காரணமாக கிழக்கு இந்திய மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன

கிழக்கு இந்தியாவில்(East India)கடந்த 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிக அதிகளவான வெப்பநிலை இந்த ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதிக வெப்பத்தால் பாதிப்பு
இந்தியாவை பாதித்துள்ள இந்த வெயிலின் தாக்கத்தால், இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பங்களாதேஷிலும்(bangladesh) 40 டிகிரி செல்சியஸ் வெப்பமான வானிலை பதிவாகியுள்ளதுடன் 7 தசாப்தங்களின் பின்னர் நாட்டை பாதித்த மிக மோசமான வெப்ப அலை வானிலையாக இது பதிவாகியுள்ளது.

தாய்லாந்திலும்(thailand) தற்போது அதிகளான வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், அதன் தாக்கத்தினால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.