;
Athirady Tamil News

அவுஸ்திரேலியாவில் நடை பயிற்சிக்கு சென்ற பெண் அமைச்சருக்கு ஏற்பட்ட நிலை!

0

அவுஸ்திரேலியாவில் நடைபயிற்சியில் சென்று கொண்டிருந்த பெண் அமைச்சரை கடத்தி மயக்க மருந்து கொடுத்து தகாத நிலைக்கு உட்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள எப்பூன் தொகுதியில் இருந்து எம்.பியாக தேர்வு செய்யப்பட்ட 37 வயது பெண்மணி பிரிட்டானி லாவ்கா(Brittany Lauga).இவர் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் சுகாதாரத்துறை துணை அமைச்சராகவும் இருந்து வருகிறார்.

இரவு நேரத்தில் நடை பயிற்சி சென்றவேளை
இந்நிலையில் இரவு நேரத்தில் தனது வீட்டின் அருகே சாலையில் பிரிட்டானி லாவ்கா நடை பயிற்சி சென்றுள்ளார். அப்போது அவரை பிடித்து தாக்கிய மர்ம கும்பல் அவருக்கு மயக்க ஊசி செலுத்தி தகாத நிலைக்கு உட்படுத்தியுள்ளனர்.

பெண் அமைச்சருக்கே இந்த நிலை என்றால்
இதுகுறித்து லாவ்கா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த மேலும் சில பெண்கள் லாவ்காவை தொடர்பு கொண்டு தங்களுக்கும் இதுபோன்ற வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன. பெண் அமைச்சரையே மர்ம கும்பல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.