;
Athirady Tamil News

வவுனியாவில் குடும்பஸ்தரின் மரணத்துடன் தொடர்புடைய இருவர் கைது

0

வவுனியா, மதுரா நகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்பில் அவரது மருமகனும், நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் இன்று(08) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த திங்கட்கிழமை (06) மாலை ஆசிக்குளம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட மதுராநகர் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் மாமனார், மருமகன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகள்
இதன்போது மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் மருமகன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து மண்வெட்டி, கோடரி மற்றும் தலைக்கவசங்களினால் தாக்கியுள்ளனர்.

இத்தாக்குதலினால் பலத்த காயங்களுக்குள்ளான மாமன் அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி அருகில் உள்ள வீட்டின் வாசலிலே வீழ்ந்துள்ளார்.வீழ்ந்து கிடந்த குறித்த நபரினை அயலில் உள்ளவர்கள் இணைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுயை கணேசமூர்த்தி (மோகன்) என்பவரே மரணமடைந்தவராவார்.

சம்பவ இடத்திற்கு சென்ற சிதம்பரபுரம் பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளடன், குடும்ப தகராறினாலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மரணித்தவரின் மருமகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.