;
Athirady Tamil News

ஜனாதிபதியின்    விஜயம் தொடர்பான முன்னாயத்த பணிகள் தீவிரம்

0

நிந்தவூர் கலாச்சார மண்டபத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பித்து வைக்கும் நோக்கில் ஜனாதிபதி எதிர்வரும் வாரத்தில் நிந்தவூருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை(15) ஜனாதிபதி செயலக அதிகாரிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர், மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளூராட்சி ஆணையாளர், இலங்கை பொலிஸ் ஐயர் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், பிரதேச செயலாளர், உள்ளிட்ட உயரதிகாரிகள் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் பார்வையிட்டனர்.

இதன்போது, கலாச்சார மண்டபத்தின் தற்போதைய நிலை, மீள ஆரம்பிக்கப்படவுள்ள அபிவிருத்திப் பணிகள் மற்றும் ஜனாதிபதி அவர்களின் விஜயத்துடன் தொடர்புடைய ஏற்பாடுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.