;
Athirady Tamil News

யாழில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றிலிருந்து நால்வர் கைது

0

யாழ்ப்பாணம்(Jaffna) – கந்தர்மடம் மணல்தறை வீதிப் பகுதியில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேகத்திற்கிடமான வீடொன்றிலிருந்து நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது வீட்டு உரிமையாளர் , இரண்டு பெண்கள், மற்றொரு ஆண் என நால்வரை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்த தலைமையிலான யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று(09.05.2024) கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை
சில நாட்களாக குறித்த வீட்டில் அதிகளவு பெண்கள் மற்றும் ஆண்கள் வந்து போவதாக யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு அந்தப் பகுதி ஊர்மக்களினால் தகவல் வழங்கபட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்ட வேளை இரு பெண்களையும் ஆண் ஒருவரையும் மற்றும் வீட்டின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

இதேவேளை மற்றொருவர் பொலிஸார் வருவதை கண்டு மதில் பாய்ந்து தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தப்பிச் சென்றவருடையதாக கருதப்படும் கைத்தொலைபேசியை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறன்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.