;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1706081.html is currently offline. Cloudflare's Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive's Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

Bank Account -ல் தவறுதலாக Credit ஆன ரூ.6.3 கோடி! ஆடம்பரமாக செலவு செய்த பெண்ணிற்கு ஆதரவு குரல்

0

வங்கி கணக்கிற்கு தவறுதலாக ரூ.6.3 கோடி கிரெடிட் செய்யப்பட்ட பணத்தை செலவு செய்த பெண்ணிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

Credit ஆன ரூ.6.3 கோடி
கடந்த 2017 -ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சிபொங்கில் மணி (Sibongile Mani) என்ற பெண்ணின் வாங்கிக்கணக்கிற்கு தவறுதாக ரூ 6.3 கோடி பணம் (14 million rands) வந்ததுள்ளது.

அந்த நேரத்தில் அவர் கல்லூரியில் படித்து வந்ததால் மாதந்தோறும் ரூ.6000 (1400 rands) கல்வி உதவித் தொகை பெற்று வந்தார். அப்போது தான் அவரது வங்கி கணக்கிற்கு தவறுதலாக ரூ.6.3 கோடி வந்துள்ளது.

ஆனால், இதுகுறித்து வங்கியிடம் எதுவும் விசாரிக்காமல் shopping, Party, நண்பர்களுக்கு பணத்தை கொடுப்பது என ரூ.4 லட்சத்தை ஆடம்பரமாக செலவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான வங்கிக் கணக்கு விவரங்கள் கல்லூரியில் இருக்கும் நபர் ஒருவருக்கு தெரியவந்ததையடுத்து, அவர் வங்கியில் புகார் அளித்துள்ளார்.

பெண் விடுதலை
பின்னர், சிபொங்கில் மணி மீது வங்கியானது வழக்கு தொடர்ந்தது. பின்னர் அவர் மீது திருட்டு மற்றும் மோசடி வழக்கு பதியப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இதையடுத்து நீதிமன்றத்தில் சிபொங்கில் மணி மேல்முறையீடு செய்தார். அப்போது, “சிபொங்கில் மணிக்கு கல்வி உதவித்தொகை வருவது வழக்கம்.

அவருக்கு அந்த நேரத்தில் ரூ.6.3 கோடி வந்ததும் செலவழித்து விட்டார். இது வங்கியின் மீது தான் தவறு” என்று நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் சில மாணவர் அமைப்புகளும் சிபொங்கில் மணிக்கு ஆதரவாக குரல் கொடுத்தன.

பின்னர், “செலவழித்த பணத்தை மட்டும் சிபொங்கில் மணி கொடுத்துவிட்டு சிறையிலிருந்து விடுதலையாகலாம்” நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, செலவழித்த பணத்தை திருப்பிக் கொடுத்து ஐந்து ஆண்டுகால சிறைக்குப் பிறகு சிபொங்கில் மணி விடுதலையாகியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.