;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1706198.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

வடமாகாண மல்யுத்தப் போட்டியில் வெற்றியீட்டிய முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகள் கௌரவிப்பு

0

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட மல்யுத்தப் போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட வீர வீராங்கனைகள் மொத்தமாக 16 தங்கப்பதக்கங்களைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பெருமைசேர்துள்ளனர்.

வடமாகாணத்தில் மல்யுத்தத்தில் முல்லைத்தீவு மாவட்டம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளதென்பது மேலும் சாதனையான விடயமாகும்.

இந்த வெற்றியினைப் பெற்றுத்தந்த வீர வீராங்கனைகளை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கௌரவித்து பாரட்டிய நிகழ்வு இன்றையதினம் (15) காலை 11.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட விளையாட்டுப் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் வீர வீராங்கனைகளை வாழ்த்திக் கௌரவித்தார். அத்தோடு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு.மு.முபாரக், மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கிருபாசுதன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர், மாவட்ட பயிற்றுவிப்பாளர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.