;
Athirady Tamil News

கஜகஸ்தான் விமான விபத்தில் 67 பேர் பலி! பறவைகளால் நேர்ந்த துயரம்..பதறவைக்கும் வீடியோ

0

கஜகஸ்தானில் ஏர்லைன்ஸ் விமானம் விபத்திற்குள்ளானதில் 67 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்லைன்ஸ் விமானம்
அஜர்பைஜானில் இருந்து ரஷ்யாவுக்கு கிளம்பிய ஏர்லைன்ஸ் விமானம் பனிமூட்டம் காரணமாக திருப்பி விடப்பட்டது.

ஆனால், கஜகஸ்தான் விமான நிலையம் அருகே விமானம் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. அதில் பயணித்தவர்களின் கதி தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் விமானம் விபத்து குறித்தும், பலியானவர்கள் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.


67 பேர் பலி

ஏர்லைன்ஸ் விமானம் பறவைகள் கூட்டத்துடன் மோதியதாலும், திசைமாற்றி செயலிழந்ததாலும் விபத்துக்கு முன் விமானம் ஒரு துயர சமிக்கையை அனுப்பியது.

காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐநா தகவல்
காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐநா தகவல்
விமானிகள் கடைசி வரை வேகத்தையும், உயரத்தையும் பெற முயன்றனர். ஆனால் கட்டுப்பாடுகள் முற்றிலும் தோல்வியடைந்தன.

அப்போதுதான் விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில் 67 பேர் உயிரிழந்ததாகவும், 25 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவனையில் அனுமதித்தனர். மேலும் அதிகாரிகள் விபத்து குறித்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.