;
Athirady Tamil News

வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் “சிவாலயங்களின் வழித்தடம்” என்ற சிறப்பு நூல் வெளியீடு

0

வடக்கிலுள்ள தொன்மையான பிரசித்தி பெற்ற சிவாலயங்களின் விபரங்களை தொகுத்து வடக்கு மாகாண சுற்றுலா பணியகத்தால் “சிவாலயங்களின் வழித்தடம்” என்ற சிறப்பு நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண பிரதம செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் நூலின் முதல் பிரதியை வடக்கு மாகாண சுற்றுலா பணியக தலைவர் பத்திநாதன் வெளியிட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி, வடமாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், மன்னார் மாவட்ட செயலாளர் கனகேஸ்வரன், துறைசார் அதிகாரிகள், ஆலய அறங்காவலர்கள், விடுதி உரிமையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது வடக்கு மாகாண சுற்றுலாத்துறையின் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் காணொளித் தொகுப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.