;
Athirady Tamil News

அமெரிக்காவில் மீண்டும் செயற்படவிருக்கும் டிக்டொக் செயலி!!

0

அமெரிக்காவில் Tiktok செயலி அதன் சேவைகளை மீண்டும் தொடங்கவிருக்கிறது.

நாட்டின் அடுத்த அதிபராகப் பொறுப்பேற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப், தாம் ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்கர்கள் TikTok சேவைகளைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படும் என்று கூறியதைத் தொடர்ந்து சேவைகள் தொடங்குகின்றன.

அவரது முயற்சிகளால் செயலியை மீண்டும் அமெரிக்காவில் செயல்படுத்த முடிவதாக TikTok அறிவித்தது.

170 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களுக்கு TikTok சேவை வழங்கப்படுகிறது.

அதன் வழி 7 மில்லியனுக்கும் அதிகமான சிறிய வரத்தகங்கள் செழிக்கின்றன.

அதற்காக TikTok டிரம்புக்கு நன்றி கூறியது.

தாம் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு TikTok செயலிக்கு விதிக்கப்பட்ட தடையிலிருந்து அதற்கு விலக்கு அளிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று டிரம்ப் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.