;
Athirady Tamil News

மீன்பிடி வலையில் சிக்கிய மனித எலும்புகளால் பரபரப்பு!

0

களுத்துறை – மில்லனிய, ஹல்தொட்ட பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் மீன்பிடி வலையில் இருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கால்வாய்க்கு மீன்பிடிக்கச் சென்ற குழு ஒன்று ஓடைக் கரையில் உள்ள மூங்கில் புதருக்கு அருகில் மீன்பிடி வலையை வீசிய போது வலையில் இருந்து மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது மேலும் பல மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர், ஹொரணை நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு, மனித எலும்புகளை ஹொரண சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.