;
Athirady Tamil News

தொலைபேசி பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை – கடுமையாகும் சட்டம்

0

நாட்டிற்குள் சட்டவிரோதமாகவும் தரமற்ற தகவல் தொடர்பு சாதனங்களையும் எதிர்காலத்தில் இறக்குமதி செய்ய வாய்ப்பே இருக்காது என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த விதிகளை மீறும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என அதன் இயக்குநர் ஓய்வு பெற்ற ஜெனரல் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் தெரிவித்தார்.

வர்த்தகர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்வதற்கு வழங்கப்பட்ட காலம் எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் முடிவடைவதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

IMEI எண்கள்

அதற்கமைய, தற்போது செயலில் உள்ள தொலைபேசிகளின் IMEI எண்கள் பதிவு செய்யப்படவில்லை என்றால், அவை எதிர்காலத்தில் தொலைத்தொடர்பு வலையமைப்புகள் செயலில் இருக்காது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்பு IMEI எண்கள் பதிவு செய்யப்பட்ட வலையமைப்புகளுக்கு எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்தாது என்று இயக்குநர் ஜெனரல் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.