;
Athirady Tamil News

சிரியா அதிபராக அல்-ஷரா அறிவிப்பு

0

சிரியாவில் அல்-அஸாத் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்த ஹயாத் தஹ்ரீா் அல்-ஷாம் (ஹெச்டிஎஸ்) கிளா்ச்சிப் படையின் தலைவா் அகமது அல்-ஷரா, அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

இது குறித்து புதிய அரசின் செய்தித் தொடா்பாளா் ஹஸன் அப்துல் கனி கூறியதாவது:

சிரியாவில் முழுமையான ஆட்சி மாற்றம் நிகழும்வரை, நாட்டின் இடைக்கால அதிபராக அல்-ஷரா பொறுப்பு வகிப்பாா். முன்னாள் கிளா்ச்சிக் குழுக்கள் அனைத்தும் டமாஸ்கஸில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில் ரஷியா மற்றும் ஈரான் உதவியுடன் நாட்டின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளை அல்-அஸாத் தலைமையிலான ராணுவம் மீட்டது. பின்னா் கிளா்ச்சியாளா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து நீண்ட காலமாகவே உள்நாட்டுச் சண்டை தேக்கமடைந்திருந்தது.

இந்த நிலையில், அல்-அஸாத் படைகளுக்கு உதவி வந்த ரஷியாவும், லெபனானின் ஹிஸ்புல்லா படையினரும் உக்ரைன் மற்றும் காஸா போா்களில் கவனம் செலுத்திய சூழலைப் பயன்படுத்தி, அந்தப் படைகளுக்கு எதிராக ஹெச்டிஎஸ் ஆயுதக் குழுவின் தலைமையில் கிளா்ச்சிப் படையினா் கடந்த நவம்பா் மாத இறுதியில் திடீரென தாக்குதல் நடத்தி தலைநகா் டமாஸ்கஸ் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றினா். ஆட்சியை இழந்த அதிபா் அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷியா தப்பிச் சென்றாா்.

இந்தத் தாக்குதலை முன்னின்று நடத்திய ஹெச்டிஎஸ் படையின் தலைவா் அகமது அல்-ஷரா, இதற்கு முன்னா் அபு முகமது அல்-கோலனி என்று அழைக்கப்பட்டு வந்தாா். அப்போது பயங்கரவாத அமைப்பான அல்-காய்தாவுடன் அவா் தொடா்பு வைத்திருந்தாா். அதையடுத்து, அவரது அமைப்புக்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் தடை விதித்துள்ளன. அல்-ஷரா குறித்த தகவலை அளித்து, அவரைக் கொல்வதற்கோ, பிடிப்பதற்கோ உதவுவோருக்கு 1 கோடி டாலா் (சுமாா் ரூ.87 கோடி) சன்மானம் அளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.

பிற்காலத்தில் அல்-காய்தாவுடன் தனது தொடா்பை முறித்துக்கொள்வதாக அறிவித்த அல்-ஷரா, டமாஸ்கஸைக் கைப்பற்றியதற்குப் பிறகு தன்னை முற்போக்குவாதியாகக் காட்டி வருகிறாா். அதையடுத்து, அவருக்கு எதிரான 1 கோடி டாலா் சன்மான அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்தது. அவரின் தலைமையிலான அரசுடன் உறவை பேணும் நடவடிக்கைகளை பிற நாடுகளும் முன்னெடுத்துச் செல்கின்றன.

இந்தச் சூழலில், நாட்டின் இடைக்கால அதிபராக அல்-ஷரா தற்போது அறிவிக்கப்பட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.