;
Athirady Tamil News

2026ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் இந்த நடைமுறைக்கு அனுமதி கிடையாது

0

2026ஆம் ஆண்டிலிருந்து, சுவிஸ் மக்கள் வெளிநாடுகளிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுக்க முடியாது.

வெளிநாடுகளிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுக்க தடை
2026 இறுதி வாக்கில், சுவிஸ் நாட்டவர்கள் வெளிநாடுகளிலிருந்து குழந்தைகளைத் தத்தெடுக்க தடை விதிக்கும் வகையிலான சட்ட வரைவு ஒன்றை உருவாக்குமாறு, சுவிட்சர்லாந்தை ஆளும் ஃபெடரல் கவுன்சில், நீதி அமைச்சகத்தை அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகளைத் தத்தெடுத்தல் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் இந்த திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

தத்தெடுத்தல் தொடர்பில் ஆய்வு மேற்கொண்ட ஒரு நிபுணர் குழு, கடுமையான சட்டங்கள் இருந்தும் கூட, தத்தெடுத்தல் தவறாக பயன்படுத்தப்படுவதை முழுமையாக தடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளது.

ஆகவே, தத்தெடுத்தலில் தொடர்புடையவர்களை, குறிப்பாக, குழந்தைகளைப் பாதுகாக்கும் நோக்கில், இப்படி ஒரு தடையைக் கொண்டுவருவது சிறந்தது என அரசு நம்புகிறது.

சமீப காலமாக, சுவிட்சர்லாந்து நாட்டவர்கள் வெளிநாட்டுக் குழந்தைகளைத் தத்தெடுப்பது மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.