;
Athirady Tamil News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பயணி!

0

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் 52 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் வந்த பயணியால் விமானநிலைய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து குஷ் போதைப்பொருளுடன் பயணி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று அதிகாலை 01.00 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து வருகைத்தந்துள்ளார்.

05 கிலோ குஷ் போதைப்பொருள்
சந்தேகநபரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் நிறை சுமார் 05 கிலோ கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான நபர் தனது பயணப்பொதியில் இருந்த உணவுப் பைகளில் போதைப்பொருளை மறைத்து வைத்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.